articles

img

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் இத்தனை முக்கியமானவையா?

அக்டோபர் 2023 மாதத்திற்கான வேலையின்மை விகிதத்தை   இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அறிவித்துள்ளது.

பொதுவாக வேலையின்மை விகிதம் பின்வருமாறு வரையறுக்கப் படுகிறது: கணக்கெடுப்பு / ஆய்வு மேற்கொள்ளப்படும் அன்று வேலை கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை, வேலை செய்வதற்கு விருப்பமுள்ள ஒட்டு மொத்தக் கூலிப் பட்டாளத்தின் எண்ணிக்கை (வேலை பெற்றோர் + வேலை கிடைக்கப் பெறாதோர்) ஆகிய இரண்டிற்கும் இடையிலான விகிதமே வேலையின்மை விகிதம்.

சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள தரவு களின் படி அக்டோபர் 2023 மாதத்தில் வேலையின்மை விகிதம்  கிராமப்புறங் களில் 10.82 சதவீதமாகவும் நகர்ப் புறங்களில் 8.44 சதவீதமாகவும் ஒட்டு மொத்தமாக 10.05 சதவீதமாகவும் உள்ளது. கடந்த மாதத்தில், அதாவது செப்டம்பர் 2023இல் நிலவிய 7.09 சத வீதத்துடன் ஒப்பிடும் பொழுது இது மிக அதிகம் என்பது மட்டுமல்ல; மே 2021 லிருந்தே ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இது வரை இருந்ததில்லை. கோவிட் ஊரடங்கு காலத்தில் தான் மிக அதிகமான வேலையின்மை விகிதம் நம் தேசத்தில் நிலவியது.a

அதிகரிக்கும் கூலிப் பட்டாளம்
தற்போதைய புதிய புள்ளிவிவ ரங்கள், வேலையின்மை விகிதம் குறித்த பல்வேறு விவாதங்களை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.  பொதுவாக வேலையின்மை விகிதம் மாதத்திற்கு மாதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். ஆனால் தற்போதைய தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது கடந்த 5 ஆண்டு களாக வேலை பெறும் கூலிப் பட்டாளத் தின் எண்ணிக்கை 40 கோடி என்கிற எண்ணிக்கையிலேயே உள்ளது. அதாவது, வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்பது இல்லாமல் 40 கோடி என்கிற எண்ணிக்கையிலேயே தேங்கிப் போயுள்ளது. மறுபுறம் கூலிப் பட்டாளத் திற்குள் புதிதாக வேலை கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப இக்கூலிப் பட்டாளத்தில் இருந்து முதுமை காரணமாகவோ பிற கார ணங்களாலோ வெளியேறுவோரின் எண்ணிக்கையும் இல்லை. அதனால், வேலையின்மை விகிதம்அதிகரிக்கிறது

வேலைவாய்ப்பு ஏன்  தேங்கிப் போயுள்ளது?

பல கருத்தாளர்கள் முன் வைக்கும் காரணம், பெருந்தொற்று காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி இன்னும் முழுமையாக மீட்சி யடையாமல் உள்ளது; பொருளா தாரத்தை முடுக்கிவிட்டால் அது வேலையின்மை விகிதத்தை நீக்கி விடும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்கள். இவர்களின் இந்த கூற்று ஒரு புறம் ‘உலகில் வேக மாக வளர்ச்சி பெற்று வரும் பொரு ளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று’ என்கிற மோடி அரசின் தம்பட்டத்தினை மறுதலிக்கிறது. மறுபுறம் இக்கூற்று மூலமாக மட்டுமே தற்பொழுது நிலவும் வேலையின்மை விகிதத்தை விளக்கி விட முடியாது.

2019ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடும் பொழுது 16 சதவீத பொருளா தார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. (2023-இல் மட்டும் 6 சதவீத வளர்ச்சி) ஆனால், இப்பொருளாதார வளர்ச்சி, வேலைகளை உருவாக்குவதில் பிரதி பலிக்கவில்லை. பொருளாதாரத்தில் 2019லிருந்து 16 சதவீத வளர்ச்சி ஏற் பட்டிருந்தாலும் வேலை வாய்ப்பு என்பது 40 கோடி என்கிற எண்ணிக்கை யிலேயே தேக்கம் அடைந்துள்ளது. இது வளர்ச்சி நிகழ்முறையின் தன்மை  (Nature of Growth Process) மாறி யுள்ளதை நமக்கு உணர்த்துகிறது. இத்தரவுகள், பொருளாதார வளர்ச்சி யினை முடுக்கி விட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்  என்கிற கூற்றி னையும்  செல்லாததாக ஆக்கிவிட்டது. வேலைவாய்ப்பு உட்பட அனைத்து அம்சங்களும், வளர்ச்சி எவ்வாறு, எத்தகு தன்மையில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்துத் தான் உள்ளது.

கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சி குறைவான வேலை வாய்ப்பி னையே உருவாக்கி வந்தது.  அந்த குறைந்தபட்சம் என்கிற தன்மையும் தற்பொழுது மாறி முற்றிலும் வேலை வாய்ப்பையே உருவாக்காத வளர்ச்சி யாக உள்ளது.

‘வளர்ச்சி’ வேலைவாய்ப்பில் பிரதிபலிக்காததேன்?

புதிய வேலைவாய்ப்புகள் உரு வாகாமல் போனதற்கு காரணம் கடந்த 5 ஆண்டுகளாக சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்தித் துறை முடங்கிப் போய் மீட்சி பெறாமலே இருப்பது தான். நம் தேசத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்தித் துறை மிக அதிக மான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளில் ஒன்று. புதிய தாராளமயக் கொள்கைகளின் காரணமாக இத்துறைக்கு அளித்து வந்த ஆதர வை, அரசு விலக்கிக் கொண்டது; கட்டுப் பாடற்ற அந்நிய நிறுவனங்கள் / பொருட்களின் போட்டி ஆகியன மட்டும் சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்தித் துறையை சீரழிக்கவில்லை; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரி அறிமுகம் ஆகிய மோடி அரசின் கொள்கைகளும் இத்துறையை கடுமையாகப் பாதித்தன. இறுதியாக கோவிட் 19 காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இத்துறையை நிர்மூலமாக்கி விட்டது. அன்றிலிருந்து தற்பொழுது வரை சிறு, குறு, நடுத்தரத் தொழில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி என்பது பூஜ்யமாகவே உள்ளது. 

முதலாளிகளுக்கான மானியங்களும் அதன் விளைவுகளும்

பாஜக அரசின் பொருளாதார நட வடிக்கை என்பது பல்வேறு முத லாளிகளுக்கு அவர்கள் முதலீடு செய்வ தற்காக மானியங்கள் வழங்குவது என்பதாகத் தான் உள்ளது; இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி முடுக்கி விடப்படும் என்று அரசு கருதுகிறது. இந்த வளர்ச்சி எல்லா நோய்களுக்குமான மாமருந்து என்கிற மாயை உருவாக்கப்படுகிறது. ஆனால் அரசின் இப்பொருளாதார நடவடிக்கைகள் இரு பிரத்யேகக் காரணங்களால் பலனளிக்கவில்லை.

முதலாவதாக, ஒரு கட்டுப்படுத்தக் கூடிய சந்தையில் முதலீடு என்பது, பொருட்களுக்கான கிராக்கியின் அள வில் (Size of Demand) எதிர்பார்க்கப் படும் வளர்ச்சியை பொறுத்ததே. கிராக்கியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் முதலீட்டை உயர்த்த உதவாது; இதற்கு மாறாக இம்மானியங்களை முதலீடு செய்யாமல் முதலாளிகள் தங்கள் பாக்கெட்டுக்குள்ளோ/ கஜானா விற்குள்ளோ போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். நிதிப் பற்றாக் குறையை ஒரு எல்லைக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக அரசு தனது செலவினங்களை எல்லாம் வெட்டிவிட்டுத் தான், அரசின் நிதி களை எல்லாம் முதலாளிகளுக்கு மானியங்களாக மடைமாற்றம் செய்கிறது. இந்த நிதியினையும் முதலாளிகள் செலவு செய்வதில்லை; அதனால் கிராக்கியும் உருவாகாமல் சந்தை சுருங்கி விடுகிறது; இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்திலும் சுருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இரண்டாவதாக, முதலாளிகளுக்கு செய்யும் இந்த நிதி மடை மாற்றம் முதலீட்டை உயர்த்தி ஜி.டி.பி. யில் சிறு  வளர்ச்சி ஏற்பட்டாலும் அது வேலை  வாய்ப்பினை உருவாக்கும் தன்மை யில் இல்லை. காரணம், வேலை வாய்ப்புகள் மிகுந்துள்ள சிறு, குறு,  நடுத்தரத் தொழில் உற்பத்தித் துறைக்கு  அரசின் ஆதரவான எவ்வித பொருளாதார நடவடிக்கைகளும் இல்லை என்பதால் இத்தகு விளைவு கள் ஏற்படுகின்றன.

வேலைவாய்ப்பினை உருவாக்க / ஊக்குவிக்க வேண்டும் என்கிற பெயரில் முதலாளிகளுக்கு வரிச் சலு கைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே அரசாங்கம் அத்தி யாவசியமான செலவினங்களைக் கூட செய்வது இல்லை. குறிப்பாக அரசுத் துறையில் இருக்கும் ஏராள மான காலிப் பணியிடங்களைக் கூட நிரப்புவது இல்லை. இது ஒரு முரண் பாடு. வெளிப்படையான காரணம், நிதிக் கட்டுப்பாடு (Fiscal constraint). ஆனால், இந்நிதி கட்டுப்பாடு முத லாளிகளுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளுக்கு எப்பொழுதும் ஒரு காரணமாக இருப்பதில்லை. 

மேலும், வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ள வேளையில், அதுவும் கிராமப்புற வேலையின்மை விகிதம் மிகவும் அதிகரித்துள்ள இத்தரு ணத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியினை மோடி அரசாங்கம் வெட்டியுள்ளது. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள பாஜக அரசாங்கம் எப்பொழு துமே மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தினை எதிர்த்தே வந்துள்ளது. இத்திட்டத்தினை திரும்பப்  பெறுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறது. இந்தப் பின்னணி யில்தான் சி.எம்.ஐ.இ தரவுகள், அதி கரித்து வரும் வேலையின்மை விகிதத்தைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் பாஜக அரசாங்கத்தின் வேலையின்மை மீதான  தவறான கருத்துகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பேரா.பிரபாத் பட்நாயக் அவர்களின்  
The Growing crisis of Unemployment   என்கிற கட்டுரையின் சாராம்சம்
-தமிழில்: அ.கோவிந்தராஜன்